தீபாவளி - விளக்கம் தரவேண்டிய தெய்வ உருவங்கள்

தீபாவளி - விளக்கம் தரவேண்டிய தெய்வ உருவங்கள்
 
அன்னபூரணி
பூமிக்கு உணவை உற்பத்தி செய்விக்கும் சக்தி தான் அன்னபூரணி.பசித்தோர்க்கு வயியார உணவிடல் வேண்டும் என்று நம்முள் உள்ள அன்பே அன்னபூரணி.உணவை, பூமியை வீணாக்கும் போது அன்னபூரணி சக்தி உதவாது.
 
தீபாவளி அன்று காசியில் தங்க அன்னபூரணி விக்ரஹம் லக்ஷ்மி - பூமிதேவியுடன் மூன்று நாட்கள் தரிசனத்துக்கு வைக்கப்படும்.
 
லக்ஷ்மி - வாழ்க்கைக்கு வேண்டிய எட்டு வகை அடிப்படைச் செல்வங்கள்.
 
பூமி - நமக்கு வாழ ஆதாரம் தரும் இட சக்தி.
 
கங்கை
அனைத்து நீர் நிலைகளில் ஆதார சக்தியே கங்கை.நீரின் சக்தி என்றும் கூறுக.உடல் மற்றும் உள்ளத் தூய்மையை அருளும் சக்தி கங்கை.சுயநலம் இல்லாத மனதில் தூய்மை சேர்கிறது.இதையே கங்கை குறிக்கிறது.பாரபட்சம் இன்றி கங்கை எல்லோரின் அழுக்கையும் ஏற்கிறது.அதனால் தான் சிவன் தலைதூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்.தன்னலம் அற்ற மனமே அந்த கங்கை.
 
கால பைரவர்
ப்ரம்மம் சக்தியாக மாறிட ஒரு கால அவகாசம் தேவை.அந்த time energy தான் கால பைரவர்.
 
காசி விஸ்வநாதர்
ப்ரம்மம் சக்தியாகி, ஐம்பூதங்கள் ஆகி உருவத் தோற்றங்கள் படைக்கப்பட்ட போது முதலில் உருவான உருவம் காசியில் உள்ள லிங்கம்.விஸ்வம் - ப்ரபஞ்சம், நாதர் - மூலக் காரணம். ப்ரபஞ்சத்துக்கு மூல விதையாக இருக்கும் ப்ரம்மத்தின் குறியீடு.
 
காசி விசாலாக்ஷி
அனைத்தையும் பரந்த மனதுடன் ஏற்றுக் கொண்டு பார்க்கும் பார்வையே விசாலமான விழிப்புணர்வு கொண்ட உட்பார்வை.அதன் சக்தியே தேவி விசாலாக்ஷி.
 
சாகம்பரி
தாவரங்கள் மனிதனுக்கும் பிற உயிர்களுக்கும் உற்பத்தி செய்து கொடுக்கும் காய் கனி வித்துக்கள் மூலிகைகள் ஆகியவற்றின் சக்தியே சாகம்பரி தேவி
Deepawali - explanation
Greatness of navarathry
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries