மோஹினியின் உண்மைத் தன்மை உணர்ந்தால் வைகுண்டமே...

மோஹினியின் உண்மைத் தன்மை உணர்ந்தால் வைகுண்டமே...
 
பரம்பொருள் பராசக்தியாக மாறி அதன் மூலம் ப்ரபஞ்ச உற்பத்தி ஆரம்பம் ஆவதையே வேதம் காட்டுகிறது.
அனைத்துக்கும் மூலமான பரம்பொருளை ஆண் தத்துவம் எனவும் பராசக்தியான ப்ரக்ருத்தி [இயற்கை சக்தி] பெண் தத்துவம் என்றும் குறிப்பிடப்படும்.
 
வைகுண்ட ஏகாதசியின் முன் இரவில் பெருமாள் இதையே காட்டுகிறார்.
ஆணாகிய அவர் மோகிக்க வைக்கும் மோஹினி வடிவில் தன் உருவை மாற்றி வருகிறார்.
காணும் அனைத்தும் பரம்பொருளின் திரிபே, வெளிப்பாடே - தோற்ற மாயையே என்று பக்தன் உணர்தல் வேண்டும்.
 
சோறு என்பது அரிசி
நகை என்பது பொன்
பானை என்பது களிமண்
உறைபனி என்பது நீர்
காணும் அனைத்தும் பரம்பொருள்
 
இதை உணர்ந்த அன்பருக்கு வாழ்வில் தடுமாற்றம், பற்று, வெறி, இழப்பு, கவலை இல்லை.
அதுவே வைகுண்ட நிலை - சதா ஆனந்த நிலை.
 
மோஹினி வேஷம் களைத்த பெருமாள் மீண்டும் கருவறை சென்று ஆண் வடிவில் பரமபத வாசல் வழியே வருகிறார்.
 
திருச்சானூர் பத்மாவதித் தாயார் ப்ரமோச்சவத்தில் பெருமாளாகவே மாறுவதும், ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாள் மார்கழியில் கண்ணனாகவே மாறுவதும் சக்தி மீண்டும் பரம்பொருளாய் மாறுதலையும், மேலும் பரமே சக்தி என்பதையும் காட்டும்.
 
இதுவே ஏகாதசி....ஓம் நமோ பகவதே வாசுதேவாய
Healthy Red rice kheer/Red rice payasam/sigappu ar...
Sakthi Foundation அர்த்தமுள்ள தீபாவளி
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries